×

தாயை பயமுறுத்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்: தாயின் கண்முன்னே உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் அழகர்சாமி என்பவரின் மகன் சரவணவிஷால் (23). இவர், கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டிலேயே தனது தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது தாயை பயமுறுத்த நினைத்த சரவணவிஷால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்வதாகக்கூறி அவரது தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து குளியலறைக்குள் சென்ற சரவண விஷால் பிளேடால் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சரவண விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் போலீசார் சரவண விஷாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சரவண விஷால் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தற்போது வீடு திரும்பிய சில நாட்களிலேயே தனது தாயை பயமுறுத்துவதாக நினைத்து நிஜமாக பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது….

The post தாயை பயமுறுத்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்: தாயின் கண்முன்னே உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Alakarsamy ,AIBEA Colony 4th street ,Paravai ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி